இந்தியாவில் 5g இணைய சேவை, விரைவில் துவங்கப்பட உள்ள நிலையில் இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து, மத்திய அரசு புதிய இலக்கு ஒன்றை நிர்ணயம் செய்துள்ளது.
அரசு நிர்ணயம் :
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அடுத்த கட்ட இணைய சேவையான 5ஜி சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டது. இதற்கான சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்து, இந்தியாவில் அதை அமல்படுத்த முடிவு செய்தது. அதன்படி வருகிற 1ம் தேதி நாடு முழுவதும் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதுகுறித்து பேசிய, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த 5ஜி இணைய சேவைக்காக ஏறத்தாழ சுமார் ரூ. 2.84 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களுக்கான இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை – மாநில அரசு திட்டவட்ட முடிவு!!
நாடு முழுவதும் ஒன்றை லட்சம் கிராமங்களில், இந்த அதிவேக இணைய சேவைக்காக அதிதி திறன் கொண்ட பைபர் இணைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், இந்த 5ஜி இணைய சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாக தெரிவித்தார். இதனால், இணையவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.