தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வென்று உள்ளன. இதைத்தொடர்ந்து 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி போலண்ட் பார்க் மைதானத்தில் நாளை (டிசம்பர் 21) பிற்பகல் 4.30 மணிக்கு நடக்கிறது.
இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி ஆட்டத்தின் போது மழை குறுக்கிடாது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அதாவது போலண்ட் பார்க் மைதானத்தில், அதிகபட்ச வெப்பநிலை 36 C மற்றும் குறைந்தபட்சம் 25 C வானிலையில் மாற்றம் காணப்படும். மேலும் 16 கிமீ / 12 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆட்டம் நடைபெறும் நாள் முழுவதும் மழை அச்சுறுத்தல் இருக்காது. இதனால் இப்போட்டி தடையின்றி நடைபெறும் என தெரிகிறது.
Enewz Tamil WhatsApp Channel
மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக முன்னணி நடிகை? எந்த தொகுதி? பரபரப்பான தகவல்!!!