ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின், முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. இதனால், இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, இவ்விரு அணிகள் மோதும் 2 வது போட்டி நாளை (பிப்ரவரி 2) ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த போட்டியில், இந்தியா வென்றால் மட்டுமே தொடரில் நிலைக்க முடியும். எனவே, நாளை நடைபெற இருக்கும் போட்டியில், இந்திய அணி ஆரம்பம் முதலே வேகம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியை பொறுத்த வரையில், ரோஹித் சர்மா , சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் கடந்த போட்டியை போல அதிரடி காட்டுவார்கள் என தெரிகிறது. இவர்களை தொடர்ந்து, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின் இவர்களும் பேட்டிங்கு கை கொடுக்க கூடும். பந்து வீச்சில், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் எதிரணியின் பேட்டிங்கு சவால் விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.