ஐசிசி சார்பாக இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி நேற்று (அக்டோபர் 19) பங்களாதேஷ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் குவித்திருந்தது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66, தன்சித் ஹசன் 51, மஹ்முதுல்லாஹ் 46 ரன்கள் எடுத்திருந்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 41.3 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில், விராட் கோலி 103*, சுப்மன் கில் 53, ரோஹித் சர்மா 48, கே எல் ராகுல் 34* ரன்கள் எடுத்திருந்தனர். இந்த போட்டியில், இந்திய அணி ஒரே பந்தில் 14 ரன்களை பங்களாதேஷின் ஹசன் மஹ்மூத் வாரி கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அது இந்திய அணிக்கு பெரும் சாதகமாக அமைந்தது.
அதாவது,
- ஹசன் மஹ்மூத் வீசிய 12 வது ஓவரின் 5வது பந்து நோ பாலாக மாறியது. ஆனால், இந்த பந்தில் விராட் கோலி 2 ரன்கள் ஓட கூடுதலாக 1 ரன் கிடைத்தது.
- இதையடுத்து, பிரீ ஹிட்டாக கிடைத்த பந்தும் நோபால் ஆனது. இந்த பந்தை விராட் கோலி பவுண்டரிக்கு விளாசினார்.
- மீண்டும் கிடைத்த பிரீ ஹிட்டில் விராட் கோலி சிக்ஸர் விளாச 2+1+4+1+6 என மொத்தம் 14 ரன்கள் கிடைத்தது.