பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் புஜாரா ஆட்டநாயகன் விருது வென்றது குறித்து தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக்:
இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பங்களாதேஷிற்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதில், இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த போட்டியில், இந்திய அணியின் நெருக்கடியான நேரத்தில், புஜாரா 90, 102* என ரன்களை அடித்து ஸ்கோரை உயர்த்தினார். இதே போல, எதிரணியை தனது தனித்துவமான பந்து வீச்சால் குல்தீப் யாதவ் 2 இன்னிங்ஸில் சேர்ந்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திருந்தனர். இவர்களில், பல மாதங்களுக்கு பிறகு தனது பார்முக்கு திரும்பியுள்ள புஜாரா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
உலக கோப்பையில் மெஸ்ஸி படைத்த சாதனைகள்…, முழுவிவரம் இதோ!!
இவருக்கு இந்த விருது வழங்கியது குறித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்திய அணி அழுத்தத்தில் இருந்த போது, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் புஜாரா பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தினார். இதனை தொடர்ந்து, 2வது இன்னிங்ஸில் புஜாரா சதம் அடித்தும் அசத்தி ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று கூறியுள்ளார். மேலும், புஜாரா பழைய பார்முக்கு திரும்பியது, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான நல்ல ஒரு அறிகுறி என்று தெரிவித்துள்ளார்.