இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில், ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி நேற்று (அக்டோபர் 8) போட்டியிட்டது. சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 199 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரும் வந்த வேகத்தில் டக் அவுட்டானார்.
Enewz Tamil WhatsApp Channel
இதனால், விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த நிலையில், விராட் கோலி 85 ரன்களில் வெளியேற, கே எல் ராகுல் 97*, ஹர்திக் பாண்டியா 11* ரன்கள் அடித்து 41.2 ஓவரிலேயே இலக்கை அடைந்து இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில், அரைசதத்திற்கு (85) மேல் அடித்த விராட் கோலி உலக கோப்பை அரங்கில் தனது 3வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். இதற்கு முன் பாகிஸ்தானுக்கு (2015) எதிராக 107, பங்களாதேஷிற்கு (2011) எதிராக 100 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.