IND vs AUS 3rd Test: இந்தூர் மைதானத்தில் யார் கை ஓங்கி இருக்கும்…, பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

0
IND vs AUS 3rd Test: இந்தூர் மைதானத்தில் யார் கை ஓங்கி இருக்கும்..., பிட்ச் ரிப்போர்ட் இதோ!!
IND vs AUS 3rd Test: இந்தூர் மைதானத்தில் யார் கை ஓங்கி இருக்கும்..., பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி நடைபெற உள்ள இந்தூர் மைதானம் யாருக்கு அதிக பலன் அளிக்கும் என்பதை இப்பதிவில் காணலாம்.

IND vs AUS:

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி, இந்திய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடி வருகிறது. இந்த டிராபியின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வென்று 2-0 என தொடரை வெல்லுவதில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, நாளை இந்தூரில் 3 வது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளது. இதே போல, ஆஸ்திரேலிய அணியும், இந்த டிராபியின் முதல் வெற்றியை பெற, இந்திய அணிக்கு அதிக நெருக்கடி கொடுக்க கூடும். இந்தூரில் 3 வது போட்டி நடைபெற இருக்கும் ஹோல்கர் மைதானமானது, கடந்த 2 போட்டிகள் நடைபெற்ற மைதானம் போல், சுழற் பந்து வீச்சுக்கு அதிக பலன் அளிக்காது.

வெட்கத்தை விட்டு நானே தனுஷ் கிட்ட வாய்ப்பு கேட்டேன்., செல்வராகவன் சொன்ன ஷாக்கிங் உண்மைகள்!!

அதாவது, ஹோல்கர் மைதானமானது செம்மண்ணால் ஆனது. இதனால், இந்த மைதானம், பவுன்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆஸ்திரேலிய வீரர்கள் பவுன்ஸி பிட்சுகளில் விளையாடுவதில் வல்லவர்கள். இதனால், இந்த இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாளைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களின் விக்கெட் வேட்டையே அதிகமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here