IND vs AUS: சென்னையில் ஒரு நாள் போட்டி…, புதிய மாற்றங்களுடன் சேப்பாக்கம்!!

0

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், புதிய மாற்றங்களுடன் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

IND vs AUS:

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி, 4 டெஸ்ட் போட்டிகள், வரும் 9ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை, நாக்பூர், டெல்லி, தரம்சாலா மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களை மையமாக கொண்டு நடைபெற இருக்கிறது.

இந்த தொடருக்கு பிறகு, மார்ச் 17, 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில், மும்பை, கடப்பா மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு சர்வதேச அணிகளுக்கு இடையே ஒரு நாள் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி நடைபெறுவதற்கு முன்பாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், புதிதாக 2 ஸ்டேண்டுகள் திறக்கப்படுவதுடன், கேலரிகளை சீரமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் 139 கோடி ரூபாய் ஒப்புதல் பெற்றுள்ளது என கூறப்படுகிறது. இதன் மூலம், கேலரிகளில் கூடுதலாக, 5000 க்கு மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்து பார்க்க முடியும். ஐபிஎல் தொடருக்கு முன்பாக, சேப்பாக்க மைதானத்தை சீரமைப்பு செய்ய இருப்பது, சென்னை ரசிகர்களுக்கு ஒரு வித மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸின் தல தோனியின் ஆட்டத்தை அதிக ரசிகர்கள் பார்க்க முடியும் என்பதே மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here