கடந்த ஏப்ரல் மாதத்துடன் வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்து விடும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
வருமான வரி:
2020ம் ஆண்டின் தொடக்கத்தில் நாட்டில் மிக சிறப்பாக அனைத்து துறைகளும் இயங்கி பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்து வந்தது. இந்நிலையில் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் மிக அதிக அளவிலான கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை துளைத்தனர். அதேபோல் அனைத்து துறைகளும் இயங்காமல் முடங்கின. இதனால் நாட்டில் மிக பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
எந்த துறையும் இயங்காத காரணத்தினால் அரசிற்கு வரிப்பணம் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அரசின் பொருளாதாரம் கேள்விக்குறியானது. இந்நிலையில் தாற்போது பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றி அனைத்து வகை துறைகளும் இயங்கி வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரமும் சரிவில் இருந்து மீண்டது. இந்நிலையில் நாட்டில் அனைவருக்கும் வருமான வரியை செலுத்துவதற்கு மத்திய அரசு கால அவகாசத்தை வழங்கியது.
‘1.50 கோடி தடுப்பூசி கேட்டா 7.33 லட்ச தடுப்பூசி தான்’ – தமிழகத்திற்கு ஏற்பட்ட அவல நிலை!!
அதன்படி முதலில் கடந்த ஏப்ரல் மாதத்திற்குள் அனைவரும் வருமான வரியை செலுத்த வேண்டும் என்றும் ஏப்ரல் மாதத்துடன் கால அவகாசம் முடிந்து விடும் என்றும் தெரிவித்தது. ஆனால் தற்போது புதிய மாதம் பிறந்துவிட்ட நிலையில் தற்போது அதனை செலுத்துவதற்கான கால அவகாசத்தை இந்த மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.