‘நானும் நிறைய தப்பு பண்ணி இருக்கேன்’ – மனம் திறக்கும் சமந்தா!!

0

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தனது சகுந்தலா படத்தின் அனுபவத்தை பகிர்ந்துள்ள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

சமந்தா

தமிழில் வெளியான மாஸ்கோவில் காவேரி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் சமந்தா. அதன் பிறகு தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு திரையுலகிற்கு தாவினார். தமிழை விட அவருக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் படமே கௌதம் இயக்கத்தில் ‘ஏ மாயா செஸ்தாவ்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த படம் அவருக்கு நல்ல வாய்ப்பை பெற்று தந்தது. அப்போதிலிருந்து தற்போது வரை சமந்தா முன்னணி நடிகை தான். அப்படி இருக்க தற்போது அவர் நடித்து வரும் சாகுந்தலம் திரைப்படத்தை பற்றி கூறியுள்ளார். இது புராண கதைகளை மையமாக வைத்து எடுக்கப்படுவதால் அதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

அதாவது சமந்தாவிற்கு இந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அது தற்போது நிறைவேறியுள்ளது என்றும் கூறியுள்ளார். பல படங்களில் நடித்து ஒரு ரசிகையாய் என்னை பாவித்து தன்னை தானே தவறுகளை சரி செய்துகொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மே 15ம் தேதி வரை கடைகளை அடைக்க தயார் – வணிகர்கள் சங்கம் அதிரடி!!

தவறு செய்வது என்பது மனித இயல்பு. நானும் பல தவறுகளை செய்து அதனை திருத்தியும் உள்ளேன், மேலும் தென்னிந்திய நடிகர்கள் அனைவருடனும் நடித்து விட்ட திருப்தியும் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here