10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வுத்துறை
தமிழகம் மற்றும் புதுவையில் 12 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இதனால் இத்தேர்வுகளுக்கான ஏற்பாட்டை தேர்வுத்துறை இயக்குனரகம் செய்து வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது 12 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்புக்கான மொழி தேர்வை கிட்டத்தட்ட 50,000க்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
இதனால் தேர்வு எழுதாத மாணவர்களை நேரில் சந்தித்து அதற்கான காரணங்களை பள்ளி ஆசிரியர்கள் விசாரித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் ஏப்ரல் 10 ஆம் தேதி வரவிருக்கும் பொதுத்தேர்விலும் தேர்வு எழுதாமல் இருக்கும், மாணவர்களின் விவரங்களை உடனடியாக எமிஸ் இணையதளத்தின் மூலம் தேர்வுத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.