IND vs AUS 3rd ODI: இந்திய அணியுடன் இணைய இருக்கும் தோனி…, எகிறும் எதிர்பார்ப்பில் 3வது ஒருநாள் போட்டி!!

0
IND vs AUS 3rd ODI: இந்திய அணியுடன் இணைய இருக்கும் தோனி..., எகிறும் எதிர்பார்ப்பில் 3வது ஒருநாள் போட்டி!!
IND vs AUS 3rd ODI: இந்திய அணியுடன் இணைய இருக்கும் தோனி..., எகிறும் எதிர்பார்ப்பில் 3வது ஒருநாள் போட்டி!!

சென்னையில் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியுடன் தோனி இணைவார் என தகவல் வெளியாகி உள்ளது.

IND vs AUS:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் வெவ்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. மும்பை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த தொடரின், முதல் இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்று தொடரை வெல்லுவதில் முன்னிலை வகிக்கின்றன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனை தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது. பல மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்ற இந்த மைதானத்தில், நாளை தான் சர்வதேச போட்டி நீண்ட இடைவேளைக்கு பிறகு நடைபெற உள்ளது. இதனால், இந்த போட்டி குறித்த எதிர்பார்ப்பு உள்ளூர் ரசிகர்களான சென்னை வாசிகளுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24: இந்த நலத்திட்டத்திற்கான முக்கிய தகவல் வெளியிடப்படுமா? வலுக்கும் எதிர்பார்ப்பு!!!

மேலும், ஐபிஎல் தொடருக்காக தோனி தலைமையிலான CSK வீரர்கள் ஏற்கனவே இந்த மைதானத்தில் பயிற்சி செய்து வருகின்றனர். இதனால், தோனியும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியை நேரில் காணுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதன் விளைவால், இந்தியாவின் வெற்றி ஒரு புறம் இருந்தாலும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியுடன் தோனியையும் சேர்த்து பார்க்க, ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here