விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் நடிகையின் மகன் ஒருவர் தனது தந்தை மற்றும் அக்காவை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை சாந்தி:
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 1 சீரியலில் ஹீரோவின் வீட்டில் பணி பெண்ணாக நடித்தவர் தான் நடிகை சாந்தி. இவர் சின்னத்திரை மட்டுமன்றி வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவருடைய கணவர் செல்வராஜ் என்பவர் இசைப்பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் இந்த தம்பதிக்கு ராஜேஷ், பிரகாஷ் என்ற மகன்களும், பிரியா என்கிற மகளும் உள்ளன. இதில் மூத்த மகன் ராஜேஷ் திருமணம் ஆகி சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். அதே போல் பிரியாவிற்கு திருமணம் ஆகி நடிகை சாந்தியின் வீட்டிற்கு பக்கத்திலே தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் குடியிருந்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அவரின் கடைசி மகன் பிரகாஷ் மட்டும் திருமணம் ஆகாமல் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மேலும் பிரகாஷ் போதைக்கு அடிமையானவராக இருந்துள்ளார். இவரை குணப்படுத்த மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைக்கு அழைத்து சென்று வந்துள்ளார் சாந்தி. ஒரு கட்டத்தில் பணம் இல்லாததால் சிகிச்சையை நிறுத்தி விட்டு வீட்டிற்க்கு அழைத்து வந்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று சாந்தி பிரகாஷ்-காக மருந்து வாங்க கடைக்கு சென்ற நேரத்தில், பிரகாஷ் அருகில் படுத்திருந்த செல்வராஜை கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.
அதன் பின்னர் அருகில் இருக்கும் அக்கா வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சண்டை முத்தி போன நிலையில், அவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பி சென்றார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடங்கினர். இதனை தொடர்ந்து சாலையில் சுற்றித்திரிந்த பிரகாஷையும் காவல்துறை கைது செய்தனர். கடைசி மகனின் போதை வெறிக்காக தனது கணவர், மகளை நடிகை சாந்தி பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.