தமிழக மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தை போன்ற கர்நாடகாவில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதுமையான திட்டத்தை அம்மாநில பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி உள்ளது.
அதாவது அங்கு ஏற்கனவே அரசு பள்ளிகளில் முட்டை, வாழைப்பழம் கடலை மிட்டாய் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆண்டு முதல் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு வரை இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு ராகிமால்ட் திட்டமும் நாளை முதல் செயல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.