தமிழகத்தில் பண்டிகை மற்றும் வரை இறுதி நாட்களில் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்புவார்கள். அவர்கள் எளிய பயணங்களை மேற்கொள்ள அவ்வப்போது சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று (மே 21) முதல் 27ம் தேதி வரை ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், முகூர்த்த நாள்கள் உள்ளிட்ட விசேஷ நாள்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் செல்பவர்கள் அதிகளவில் பேருந்துகளையே நம்பி உள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இவர்கள் தடையின்றி பேருந்து வசதி கிடைக்க மே 21 முதல் மே 27ம் தேதி வரை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் விடுப்பு எடுக்க தடை விதித்துள்ளதாக திருப்பூர் கிளை போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பயணிகள் கோடை வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்காத வகையில் போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால் பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.