தமிழக அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளையும், நலத்திட்டங்களையும் மாநில அரசு வழங்கி வருகிறது. ஆனால் சில அரசு ஊழியர்கள் நேரத்திற்கு பணிக்கு வராமல் இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. குறிப்பாக தமிழக மின்வாரிய துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தான் வருகையை மட்டும் பதிவு செய்து விட்டு பணிக்கு வராமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் முறை கொண்டு வர இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டனர்.
அதன்படி முதற்கட்டமாக மின்வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவை அமல்படுத்துவதற்கு ஊழியர்களின் விவரம், இணையதள வசதி, கணினிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் விவரங்களை டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தெரிவித்திருந்தது. தற்போது இந்த விவரங்கள் அனைத்தும் அனுப்பப்பட்ட நிலையில் அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்தப்பட இருப்பதாக மின்வாரிய தலைமையகம் தெரிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் தொடர்ந்து உயரும் காய்கறிகளின் விலை…, இப்போ ஒரு கிலோ எவ்வளவுக்கு விற்குது தெரியுமா??