நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி கடந்த மே 23ம் தேதிகளில் இருந்து பெரும்பாலானோர் வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றி வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில் வங்கி கணக்கு உடைய வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு ரூ.20,000 வரை மட்டுமே மாற்ற முடியும். அதற்கு மேல் தொகையை மாற்றுவதற்கு அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக பா.ஜ.க. பிரமுகரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
பக்கா பொறுக்கி அனிதா சம்பத்.., கமெண்டில் வச்சு செய்த நெட்டிசன்கள்.., தரமான சம்பவம் வைரல்!!
வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோரின் அமர்வில், “ரூ.2000 நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலையே பின்பற்ற வேண்டும். எனவே ரூ.20,000 க்கு மேல் மாற்ற வேண்டுமானால் அடையாள அட்டை சமர்ப்பித்து தான் மாற்ற வேண்டும்.” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.