கொரோனா பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022 வரை ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உலகக்கோப்பை போட்டி:
கொரோனா பாதிப்பு காரணமாக ஐபிஎல், ஒலிம்பிக் போட்டிகள் உட்பட பல விளையாட்டுத் தொடர்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த வருடம் அக்டோபர் 18ம் தேதி முதல் நவம்பர் 15 வரை நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2022ம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐசிசி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடாத நிலையில் ஐசிசி வட்டாரங்கள் மூலம் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த வருடம் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடைபெற ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறாமல் இருப்பது தான் ஓரே வழி என கூறப்பட்டு வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. எனினும் இது குறித்து ஐசிசி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |