கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பிளஸ் 2 பொது தேர்வுகாண பொது தேர்வு விடை தாள்கள் திருத்தம் இன்று துவங்கியுள்ளது. மேலும் திருத்தும் மையங்களில், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகளின் பட்டியலை ஒட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது தேர்வு
கடந்த மார்ச் மாதம் முடிந்த பிளஸ் 2 பொது தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்த தேர்வு முடிவடைந்ததும் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் விடைத்தாள்கள் திருத்தப்படாமல் கட்டுக்காப்பு மையங்களில், இரண்டு மாதங்களாக, போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று தொடங்க உள்ளன. ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும், திருத்தும் பணிகளை திட்டமிட்டபடி துவங்க வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மேலும் விடைத்தாள்கள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு மையங்களில் 100 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுவதால் அவர்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அருகில் உள்ள, கொரோனா வுக்கு சிகிச்சை தரும் மருத்துவமனைகளின் முகவரி, தொலைபேசி எண், சுகாதாரத்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட பட்டியலை, பள்ளிகளில் ஒட்டிவைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் மேலும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த மையங்களில் கூட்டம் கூடக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |