தமிழகத்தில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளால் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. எனவே இந்த விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமையில் வழங்கப்படும் விடுமுறைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரத்து செய்து வருகிறார். அந்த வகையில் சென்னை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை (மார்ச் 11) வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு திங்கள்கிழமை பாடவேளையை பின்பற்றி செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கும், தர்மபுரி மாவட்டத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் நாளை முழு வேலை நாளாக கருதப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் எடுத்துரைத்துள்ளார்.
அதேபோல் முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இன்னும் 3 தினங்களில் மேல்நிலை பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் தேர்வு மைய பணிகளை மேற்கொள்ள நாளை காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு முழு விடுமுறை என மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.