மக்களே.., குடையை மறந்துராதீங்க.., நாளை வெளுத்து வாங்க போகும் கனமழை – வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
நாளை வெளுத்து வாங்க போகும் கனமழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் அல்லல் பட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து  நாளை மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம்  ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகம்,  காரைக்கால் மற்றும் புதுவை  உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதுமட்டுமின்றி நாளை கடலூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி என 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

மது போதையில் தமிழக பள்ளி மாணவர்கள்…, அரசு எடுக்கும் அதிரடி நடவடிக்கை??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here