குஜராத் சட்டசபை தேர்தலை ஒட்டி, மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள வாக்காளர்களுக்கு, ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு :
முக்கிய பண்டிகைகள் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் அரசால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் வருகிற டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
எப்போதும் வழக்கமாக மாநிலத்தில், தேர்தல் போன்ற பொது நிகழ்வுகள் நடைபெற்றால் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் குஜராத் சட்டசபை தேர்தலை ஒட்டி, எல்லையோரத்தில் அமைந்துள்ள பால்கர், நந்தூர்பார், நாசிக் மற்றும் துலே ஆகிய மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
தமிழக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்., அகவிலைப்படி உயர்வு வழங்க கோரிக்கை! பயணிகள் சிரமம்!!
இதனை அனைத்து தனியார் நிறுவனங்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், மீறினால் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.