கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அடுத்து ஜனவரி மாதத்தில் இந்தியா ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது. இதனை நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி:
கடந்த 2017ம் ஆண்டில் ஜூலை மாதத்தில் இந்த ஜிஎஸ்டி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சரக்கு மற்றும் சேவைக்காக வரி செலுத்தவேண்டும் என்ற காரணத்தினால் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினர். தற்போது கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டது. மேலும் கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாத காலத்தில் ஜிஎஸ்டி வருவாய் மைனஸ் 24 சதவீதத்தை அடைந்தது. தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை தொடர்ந்து தற்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்போது ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இதனை பற்றி தெரிவித்த நிதி அமைச்சகம் கூறியதாவது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1,15,174 கோடி வசூல் வந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.1.20 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் மியான்மர் – ஓராண்டுக்கு அவசர நிலை அறிவிப்பு!!
ஜிஎஸ்டி தொடங்கிய ஆண்டு முதல் இது வரை இதுவே முதன்முறையாக ஜிஎஸ்டி வசூல் அரிகரித்துள்ளது. மேலும் கொரோனா பரவலுக்கு பின்பு தொடர்ந்து 4 மாத காலமாக ஜிஎஸ்டி வசூல் ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. தற்போது நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதை நம்மால் அறியமுடிகிறது. மேலும் கடந்த அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையில் ஜிஎஸ்டி வசூல் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி, வருமான வரி போன்றவற்றில் நடக்கும் ஊழலை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வலுவான வரி வசூல் நடவடிக்கை எடுக்கப்பட்ட காரணத்தினால் தான் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.