காதலிக்கு டிமிக்கி கொடுத்த காதலன்.., மணமேடையில் தாலியை தொடுவதற்குள் கைக்கு விலங்கு மாட்டிய போலீஸ்.. நடந்தது என்ன?

0
காதலிக்கு டிமிக்கி கொடுத்த காதலன்.., மணமேடையில் தாலியை தொடுவதற்குள் கைக்கு விலங்கு மாட்டிய போலீஸ்.. நடந்தது என்ன?
காதலிக்கு டிமிக்கி கொடுத்த காதலன்.., மணமேடையில் தாலியை தொடுவதற்குள் கைக்கு விலங்கு மாட்டிய போலீஸ்.. நடந்தது என்ன?

இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணம் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. முதலில் காதலிப்பவர்கள் பெற்றோருக்கு பயந்து காதலே வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீட்டில் பார்க்கும் பையனை திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் இப்போதெல்லாம் அப்படி கிடையாது. இப்போது காதலிக்கும் ஒரு சில பெண்கள் பெற்றோர்கள் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும் லவ் பண்ண பையனை தான் திருமணம் கொள்வேன் என உறுதியாக இருக்கின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி குடும்பத்தை எதிர்த்து நிற்கும் பெண்களை காதலர்கள் ஏமாற்றுகிற சம்பவம் இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அப்படி ஏமாற்றும் ஆண்களை பெண்கள் சும்மா விடுவதில்லை. அந்த வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களின் தரவரிசை பட்டியல்? முழு விவரம் உள்ளே!!!

ஆனால் இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அவர் காதலித்த பெண்ணை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை மணக்க தயாராகிவிட்டார். இதை அறிந்த அந்த பெண் காதலித்த பையன் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பகுதிக்கு வந்த போலீசார் உடனே விரைந்து நடவடிக்கை எடுக்க, வேறு பெண்ணை மணக்க இருந்த சுப்பிரமணியனை மணமேடையில் வைத்தே கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here