தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு பொது இடமாறுதல் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தெலுங்கானா மாநிலத்தில், இந்த பொது இடமாற்றத்திற்கு BRS அரசு தடை விதித்து இருந்ததால், பலரும் பாதிக்கப்பட்டனர். மேலும் தடையை நீக்கி மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பொது இடமாறுதல்களுக்கான அட்டவணை வெளியிடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!