மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களிலும் துப்புரவு தொழிலாளர்களாக வேலை பார்ப்பவர்களுக்கு ஊதிய உயர்வு இல்லாமல் இருப்பதாக கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநில கோரக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது “உத்திரபிரதேசத்தில் துப்புரவு தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத்தை வழங்க, மாநில அரசு குழு அமைத்துள்ளது. அதன்படி விரைவில் குறைந்தபட்ச ஊதியம் மட்டுமல்லாமல் வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உறுதி செய்யப்படும்.” என தெரிவித்துள்ளார். இது பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.