நாட்டின் தகுதியான தலைவர்களை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமை வழங்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதி வாக்குரிமையின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்த கொண்டாடப்படும் தேசிய வாக்காளர் தின விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில் “வாக்குப்பதிவு முக்கியத்துவத்தை உணர்ந்து இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது பதிவாகும் 70 சதவீத வாக்குகள் இனி 90 சதவீதமாக உயர வேண்டும்.
அனைத்து துறைகளிலும் முன்னணியில் உள்ள தமிழ்நாடு வாக்குபதிவிலும் முன்னணியாக திகழ வேண்டும்.” என கூறியுள்ளார். பின்னர் வாக்குரிமை விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பரிசு வழங்கினார்.