கொரோனா காலத்திற்கு பிறகு சர்வதேச நாட்டு பயணங்களுக்கு அனுதினமும் ஆயிரக்கணக்கானோர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் மதுரை மண்டல அலுவலகத்தில் 2,27,811 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டு உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்க படாததால் 6 ஆயிரம் நபர்களின் விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் முறையான ஆவணங்கள் சமர்ப்பித்த அன்றைய நாளிலே தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என மதுரை மண்டல அதிகாரி பா.வசந்தன் தெரிவித்துள்ளார்.
தேசிய வாக்காளர் தினம்., தேர்தலில் இளைஞர்களின் வாக்குப்பதிவு அவசியம்.., தமிழ்நாடு ஆளுநர் அதிரடி!!!
மேலும் போலீஸ் விசாரணை அறிக்கை கால தாமதமாவதால் தான் விண்ணப்பித்தவர்களுக்கு பாஸ்போர்ட் விநியோகம் தாமதமாவதாக சுட்டிக்காட்டியுள்ளார். விரைவில் கூடுதல் வசதிகளுடன் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட உள்ளதாகவும் இடைத்தரகர் தலையீடு ஒளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.