அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 18 மாதமாக வழங்கப்படாத நிலுவைத் தொகையை அரசு வழங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நிலுவைத் தொகை :
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது. இதனால் 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்தது. இதனால் ஊழியர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 18 மாதமாக, அகவிலைப்படி நிலுவை தொகை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
8 வது ஊதியக்குழுவின் ஊதிய உயர்வு அறிவிப்பை ஊழியர்கள் எதிர்பார்த்து வரும் இந்த நிலையில், அகவிலைப்படி நிலுவை தொகைக்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, நிலை 3ல் உள்ள ஊழியர்களுக்கு ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை மதிப்பிடப்பட்டுள்ளது.
அபராதம் கட்டலைனா வண்டி பறிமுதல்.., மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!
அதேபோல், நிலை 13 அல்லது 14 ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையாக ரூபாய் 1,44,200 முதல் 2,18,200 வரை இருக்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 18 மாத டிஏ நிலுவைத் தொகையை 3 தவணைகளில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.