குஜராத் அணி தோல்விக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம்.., குற்றம்சாட்டிய சேவாக், கவாஸ்கர் !!!

0
குஜராத் அணி தோல்விக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம்.., குற்றம்சாட்டிய சேவாக், கவாஸ்கர் !!!

நடப்பாண்டு IPL தொடருக்கான இறுதிப் போட்டியில் CSK அணி குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 வது முறையாக பட்டத்தை வென்றது. சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் தோல்வியை தழுவிய குஜராத் அணிக்கு சிலர் ஆறுதல் கூறினாலும் சிலர் அணியில் உள்ள குற்றங்களை விமர்சிக்க தான் செய்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் குஜராத் அணியின் தோல்விக்கு ஹர்திக் பாண்டியா தான் முழு காரணம் என முன்னாள் வீரர்கள் சேவாக், சுனில் கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது குஜராத் அணியின் வெற்றி கைக்குள் இருந்த நிலையில் கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசி இரண்டு பந்தை வீசுவதற்கு தயாராக இருந்த மோகித் சர்மாவிடம் ஹர்திக் பாண்டியா ஏதோ அறிவுரை கூறியுள்ளார். அதன் பின் அவர் வீசிய இரு பந்துகளிலும் CSK அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜடேஜா பவுண்டரி, சிக்சர் விளாசி சிஎஸ்கே அணியை வெற்றி அடைய செய்தார்.

ஹாட்டோட கொஞ்சம் சரக்கு ட்ரீட்., நண்பர்களுடன் மஜா பண்ணும் ராய் லக்ஷ்மி., வைரலாகும் புகைப்படம்!!

இதனால் குஜராத் அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது. இந்த தோல்விக்கு கடைசி பந்தை வீசும் போது மோகித் சர்மாவிடம் ஹர்திக் பாண்டியா பேச்சு கொடுத்தது தான் காரணம் என முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர். மேலும் ஒரு அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது பந்து வீச்சாளரிடம் தேவையற்றதை பேசி குழப்பி விடக்கூடாது. ஆனால் அதை ஹர்திக் பாண்டியா செய்ததால் தான் 2 வது முறையாக பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார் என சேவாக், கவாஸ்கர் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here