கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், மாவட்ட ஆட்சியர் கே.ராஜமணி ஜூலை 25 மாலை 5 மணி முதல் ஜூலை 27 காலை 6 மணி வரை மாவட்டத்தில் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவித்து உள்ளார். அதாவது வழக்கமாக இருக்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
முழு ஊரடங்கு நீட்டிப்பு:
“இந்த முழு ஊரடங்கு காலத்தில், சுகாதார பராமரிப்பு, பால் விநியோகம், மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். உழவர் சந்தை, வர்த்தகம் அல்லது பிற நிறுவனங்கள், மளிகைக் கடைகள், மீன் கடை, பூ சந்தை, இறைச்சி கடைகள், டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படாமல் இருக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகள், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உள்ளூர் நகராட்சி ஊழியர்கள் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் நேற்று 6,785 புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. இதன் மூலம், மாநில மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில், சென்னையில் இதுவரை 92,206 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் நேற்று 88 பேர் உயிரிழந்து உள்ளனர்.