செல்பீ ஆசையால் ஆற்றில் சிக்கிய இளம்பெண்கள் – போராடி மீட்ட போலீசார்கள்..!

0

ஆற்றின் நடுவே செல்பீ எடுக்க சென்ற இளம்பெண்கள் ஆற்றுவெள்ளத்தால் சிக்கிய சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்பீயால் வந்த விளைவு..!

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மலைப்பகுதியில் உள்ள ஆற்றுக்கு நடுவிலுள்ள பாறையில் இரண்டு இளம்பெண்கள் உட்கார்ந்து செல்பீ எடுக்கும் போது ஆற்று நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. செல்பீ எடுக்க ஆர்வமாக இருந்த அந்த பெண்களுக்கு ஆற்று வெள்ளம் வரப்போவது ஆரம்பத்தில் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து வெள்ளம் போல் தண்ணீர் அடித்துக்கொண்டுவர அந்த பெண்கள் காப்பாற்றச்சொல்லி கத்திக்கொண்டிருந்திருக்கிறார்கள். அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததில் மூலம் அந்த பெண்களை கயிறுகட்டிக்கொண்டு போய் காப்பாற்றினர்.

மந்திரவாதி பேச்சைக் கேட்டு 5 குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை – ஹரியானாவில் அதிர்ச்சி..!

இது குறித்து காப்பாற்றிய காவல்துறை கூறும்போது, செல்பீ எடுப்பது தப்பில்லை. இதுபோன்ற ஆபத்தான இடங்களில் செல்பீ எடுப்பதை தவிர்க்கவேண்டும். மழை நேரம் காரணமாக வெள்ளம் வந்திருக்கிறது. சுமார் 1 மணி நேரம் கடுமையான போராட்டத்துக்கு பிறகு அந்த பெண்களை காப்பாற்ற முடிந்தது. அவர்கள் துரித நடவடிக்கையால் உயிர்பிழைத்தார்கள் என்றதோடு அவர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here