இன்றைய உலகில் இருக்கும் இளைஞர்கள் சினிமா மீது அதிக மோகத்தில் இருந்து வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் பேச்சை கேட்காமல் சென்னைக்கு சென்று அல்லல்பட்டு வருகின்றனர். ஆனால் நூற்றுக்கு ஒன் பெர்சென்ட்டேஜ் தான் சினிமாவில் வெற்றி பெறுகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இதில் எந்த அனுபவமும் இல்லாமல் இறங்கும் கலைஞர்கள் தோல்வியை தழுவி வருகின்றனர். இப்படி திரைப்படத் துறையில் சாதிக்க நினைக்கும் நபர்களுக்காக மதுரை அண்ணாநகர் பகுதியில் நண்பர்கள் எல்லாம் இணைந்து “வைகை திரைப்பட இயக்கம்” என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.
பொதுவாக மதுரையில் இருந்து திரைக்கு வந்த பிரபலங்கள் எக்கச்சக்கம். அதில் குறிப்பாக வடிவேலு, விவேக், சூரி, அமீர், சசிகுமார் தற்போது முன்னணியில் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களை போல் கலைஞர்களை வளர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் “வைகை திரைப்பட இயக்கம்” என்ற இயக்கத்தை தொடங்கி இருப்பதாக சரவணபாபு என்பவர் தெரிவிக்கிறார்.