தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இப்போது மீண்டும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மீன்வளத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது குமரி கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
PKL 2024: களைகட்டிய கபடி ஆட்டம்.., 3 வது வெற்றியை பதிவு செய்த தமிழ் தலைவாஸ் அணி!!