அர்ஜென்டினா, பிரான்ஸை தொடர்ந்து காலிறுதிக்கு முன்னேறிய பிரபல அணி…, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
அர்ஜென்டினா, பிரான்ஸை தொடர்ந்து காலிறுதிக்கு முன்னேறிய பிரபல அணி..., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
அர்ஜென்டினா, பிரான்ஸை தொடர்ந்து காலிறுதிக்கு முன்னேறிய பிரபல அணி..., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

FIFA உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணியை தொடர்ந்து, செனகல் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

FIFA உலக கோப்பை:

FIFA உலக கோப்பை கால்பந்து தொடர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அர்ஜென்டினா 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போல, பிரான்ஸ் மற்றும் போலந்து அணிகள் மோதின. இதில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தியது.

 இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த வெற்றியால், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் காலிறுதி முன்னேறியுள்ளன. இதனை தொடர்ந்து, இன்று செனகல் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி மோதியது. இந்த போட்டியில், ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி வீரர்கள், 38 மற்றும் 45+3 ஆகிய நிமிடங்களில் இரு கோல்கள் அடித்து அசத்தினர். இதனால், முதல் ஆட்ட நேர முடிவில் செனகல் அணி 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்தது.

புரோ கபடி: UP யோதாஸை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ்…, டாப் 3 ல் நுழைந்து அசத்தல்!!

இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், செனகல் அணி வீரர்கள் கோல் அடிக்க முயன்ற போதும், இங்கிலாந்து வீரர்கள் அதனை முறியடித்தனர். இதன் பின் வேகம் காட்ட தொடங்கிய இங்கிலாந்தின் புகாயோ சகா 57 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடிக்க, 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் செனகல் அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியால், இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here