ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை கொரோனா காலகட்டத்திற்கு முன்பு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில காரணங்களால் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு இச்சலுகை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனால் பலரும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.