தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகைக்கு ஜாக்பாட்:
தமிழ் சினிமாவில் சின்னத்திரை நாயகியாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் மிகப் பெரிய நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாத மான் என்ற படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், முக்கிய நாயகியாக இப்போது உயர்ந்துள்ளார். தற்போது இவர், குருதியாட்டம், ஹாஸ்டல், ருத்ரன், இந்தியன் 2, பத்து தல உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
கோலிவுட் தாண்டி டோலிவுட்டிலும் பிரியா கால் பதித்துள்ளார். இவர் தற்போது தெலுங்கில், நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் விக்ரம் குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பிரியா பவானி ஷங்கரின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்