கோலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான சார்மிளா, தனது வாழ்க்கையில் சந்தித்த மோசமான அனுபவங்களை யூடியூப் வீடியோவில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
நடிகை பகீர்:
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய திரைகளில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் சார்மிளா. இவர், கிழக்கே வரும் பாட்டு, முஸ்தபா, தையல்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல மலையாள நடிகர் கிஷோர் சத்யா என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று கடந்த 2006 இல், ராஜேஷ் என்பவரை 2வது திருமணம் செய்தார்.
இவருடனான, திருமண வாழ்க்கையும் நீடிக்காமல் விவாகரத்து செய்து தற்போது மகனுடன் வசித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சார்மிளா அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது, கேரளாவில் நடைபெற்ற ஷூட்டிங் நிகழ்ச்சியில் தாம் கலந்து கொண்டதாகவும், அந்த படப்பிடிப்பில் இருந்த தயாரிப்பாளர்கள் தன்னை அந்த மாதிரி இருக்க சொல்லி தன்னிடம் பேரம் பேசியதாகவும் தெரிவித்தார்.
அவர்கள் அனைவருக்கும் 24 வயது தான் இருக்கும் என்றும், தன் மகன் வயது ஆண்கள் தன்னிடம் அப்படி நடந்து கொண்டது வேதனையான விஷயம் என்று வருத்தத்துடன் தெரிவித்தார். ஆனால், இதற்கு இடம் அளிக்காமல் அந்த ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு திரும்பி விட்டேன் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்