கொரோனா பரவல் காரணமாக மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் தங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் அனைத்து தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளார் அமைச்சர் பொன்முடி.
இது கொரோனா காலமாக உள்ளதால் அனைத்து தரப்பினரும் தங்களின் பொருளாதார அடிப்படையில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையானது சமீபத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் என்பது பெற்றோர் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்திய ஒன்றாகும்.
இதனிடையே அமைச்சர் பொன்முடி அவர்கள் தற்போது அறிக்கை ஒன்றை தெரிவித்து உள்ளார் . அதன் படி ,உயர் நீதிமன்றம் உத்தரவின் படி 75 சதவீத கட்டணம் மட்டுமே அனைத்து தனியார் கல்லூரிகளும் மாணவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். அதனை மீறி அதிக கட்டணம் வசூல் செய்தால் அந்த கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி எச்சரித்து உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்