ஆதிரை இந்த வீட்ல தான் இருப்பா.., குணசேகரன் முகத்தில் கரியை பூசிய சாருபாலா.., எதிர்நீச்சல் ப்ரோமோ!!!

0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. ஒரு பக்கம் குணசேகரன் கதிரின் நிலைமைக்கு யார் காரணமோ அவர்களை சும்மா விடமாட்டேன் என்கிறார். இன்னொரு பக்கம் ஆதிரை வீட்டை விட்டு கிளம்புகிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் குணசேகரன், ஞானம், சக்தி எல்லோரும் SKR வீட்டுக்கு வருகின்றனர். அப்போது குணசேகரன் SKR இடம் என் தம்பியின் நிலைமைக்கு நீதான காரணம் என்று கேட்கிறார். உடனே SKR அருண் கால ஒடச்சது நீதான்னு ஒத்துக்கோ நான் உண்மையை சொல்றேன் என பிளாக்மெயில் செய்கிறார்.
அந்த நேரத்தில் ஆதிரை SKR வீட்டுக்கு வருகிறார். அதை பார்த்து குணசேகரன் எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். மேலும் ஆதிரை SKR இடம், அருணின் இந்த நிலைமைக்கு எங்க அண்ணன் தான் காரணம் என்கிறார். உடனே கரிகாலன் எதுக்கு இப்படி சொல்ற என்று ஆதிரையிடம் கேட்கிறார். அப்போது ஆதிரை கரிகாலன் முகத்தில் அறை விடுகிறார். அந்த நேரத்தில் SKR நீ என்ன சொன்னாலும் உனக்கு இந்த வீட்ல இடமில்ல வெளியே போ என்கிறார். ஆனால் சாறு பாலா ஆதிரை இங்கதான் இருப்பா என்று சொல்ல குணசேகரன் அதிர்ச்சியாகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here