நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) 2004ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 18 முதல் 70 வயது வரை உள்ள எவரும் இந்த நீண்ட கால ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் சில சலுகை பலன்கள் கிடைக்காத காரணத்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் அவ்வப்போது போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் காரணமாக இத்திட்டத்தை சீரமைக்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தெரிவித்து இருந்தார். அதன்படி புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதாவது NPS முதலீட்டாளர்கள் தங்களது கணக்கில் இருந்து 25 சதவீதம் வரை தொகையை திரும்ப பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்புதலோடு ஆன்லைனில் விண்ணப்பித்து இரண்டு நாட்களில் பெற்று கொள்ளலாம்.
+2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களா நீங்கள்.., துணைத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு!!!
இச்சலுகை மூன்று முறை மட்டுமே வழங்கப்படுவதால் அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதுபோக இத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு 11 சதவீத வட்டியுடன், திரும்ப பெறுவதற்கான வரி விலக்கு சலுகையும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.