பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
துணை தேர்வு
தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை கிட்டத்தட்ட 8,03,385 மாணவர்கள் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மொத்தம் 8,03,385 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் அதில் 7,55,451 தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள 47,934 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் இந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.அதாவது இந்த தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மாணவர்களுக்கு வரும் ஜூன் 19ஆம் தேதி துணைத் தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு கோடை விடுமுறை., குழந்தைகள் மறக்காம வாங்கிக்கங்க??
இதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வெளியாகும் என்றும், அதற்கான விண்ணப்ப கட்டணத்தை கட்டி ஹால் டிக்கெட் பெற்று மாணவர்கள் துணை தேர்வில் கலந்து கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேது ராம வர்மா அறிவித்துள்ளார்.