சமீபகாலமாக வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் ஆன்லைன் பண மோசடிக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மின்வாரியத்துறை அதிகாரப்பூர்வ செய்தி அனுப்புவது போல் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப்-பில் அனுப்பி மோசடி செய்து வருகின்றனர். அதாவது “அன்புள்ள வாடிக்கையாளரே., உங்களின் முந்தைய மாத பில் புதுப்பிக்கப்படவில்லை என்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது. உடனடியாக மின்வாரிய அதிகாரி 82603XXX42 ஐ தொடர்பு கொள்ளவும்” என செய்தியை அனுப்புகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இதனை உண்மை என நம்பி அந்த அதிகாரி நம்பருக்கு போன் செய்தால், பணத்தை இழக்க நேரிடும். எந்த ஒரு அரசுத்துறை மற்றும் வங்கி நிறுவனங்கள், உங்களது தனிப்பட்ட விவரங்களை தொலைபேசியில் கேட்க மாட்டார்கள். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழக ஆசிரியர்களே…, அரசு பள்ளியில் பணி நியமனம் பெற எளிய வழி…, இதுக்கு APPLY பண்ணுங்க போதும்!!