முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருகின்றனர். மேலும் மலையின் உச்சியில் உள்ள முருகப் பெருமானை தரிசிக்க படிப்பாதை வழியாக செல்ல முடியாத பக்கதர்கள் ரோப் கார், மின் இழுவை ரயில் சேவை ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் இக்கோவில் தொடர்பாக ஓர் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இந்த கோவிலுக்கு தனியார் நிறுவனம் சார்பில் ரூ. 15 லட்சம் மதிப்பில் மின்சார பஸ் நன்கொடையாக வழங்கப்பட்டது. இதையடுத்து அடிவாரம் பாத விநாயகர் கோயில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து இன்று முதல் மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!