இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்படும் நன்கொடை குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள உரிமை உண்டு என அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதைத்தொடர்ந்து தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வேண்டும் என SBI வங்கிக்கு அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
நடிகர் லொள்ளு சபா சேஷு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் திரையுலகம்!!
அப்போது “தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த விவரங்களில் தேர்தல் பத்திர எண்கள் ஏன்? குறிப்பிடவில்லை.” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் “தேர்தல் பத்திர எண்கள் மட்டுமல்லாமல் எந்த தேதியில் யாரால் வாங்கப்பட்டது மற்றும் பணமாக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை, நாளை மறுதினம் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும்.” எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.