திமுக கட்சியில் நீண்ட நாட்களாக பொருளாளர் ஆக இருந்து வந்த துரைமுருகன் தற்போது அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளதால் அவர் தான் அடுத்த பொதுச்செயலாளர் ஆகவுள்ளார் என உறுதியாகி உள்ளது.
அன்பழகன் மரணம்:
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சமீபத்தில் மரணமடைந்ததால் அவர் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. எனவே புதிய பொதுசெயலாளர் வரும் 29ம் தேதி தேர்வு செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பதவிக்கு துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி என்று பலரின் பெயர்கள் அடிபட்ட போதிலும் தற்போது துரைமுருகன் தான் தேர்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளது.
அதனை உறுதிசெய்யும் விதமாக துரைமுருகன் தான் வகித்து வந்த பொருளாளர் பதவியையும் தற்போது ராஜினாமா செய்துள்ளார். இதனால் வரும் 29ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் திமுக.,வின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |