பக்தர்களே .., இனி தஞ்சை பெரிய கோவிலுக்கு போகணும்னா இது ரொம்ப முக்கியம் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

0
இனி தஞ்சை பெரிய கோவிலுக்கு போகணும்னா இது ரொம்ப முக்கியம்
சமீப காலமாகவே உலக புகழ்பெற்ற திருக்கோவில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரலாற்று பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆடை கட்டுப்பாடு குறித்து கோவில் நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகத்தில் மிகவும் பிரபலமான தஞ்சை பெரிய கோவிலில் தினசரி ஏரளாமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
எனவே மற்றவர்களுக்கு தவறாக தென்படும் ஆடைகளை அணிந்து இந்த கோவிலுக்குள் அனுமதி வழங்கப்படமாட்டாது. எனவே இனிமேல் ஆண்கள் வேஷ்டி, சட்டை மற்றும் பேண்ட் மட்டுமே அணிந்து வர வேண்டும். அதே போல் பெண்கள் புடவை, தாவணி மற்றும் சுடிதார் உள்ளிட்டவைகளை அணிந்து வரலாம். குறிப்பாக சுடிதார் அணிந்து வரும் பெண்கள் கண்டிப்பாக துப்பட்டாவை அணிந்து வர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here