வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் திமுக எம்எல்ஏ என் மகன் மற்றும் மருமகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையடுத்து போலீசில் ஆஜரானால் தங்களுக்கு உடனடி ஜாமீன் வழங்க வேண்டும் என குற்றவாளிகள் தரப்பிலிருந்து மனு அளிக்கப்பட்டது. இதன் பிறகு இந்த வழக்கிற்கு ஜாமீன் வழங்குவது குறித்த கருத்துக்களை காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து நீதிமன்றம் கேட்டு அறிந்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கு குறித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இந்த வழக்கின் விசாரணை தற்போது தான் தொடங்கியுள்ளது, இந்நிலையில் குற்றவாளிகளுக்கு முன் ஜாமீன் வழங்கினால் விசாரணை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும். இதனால் ஜாமீன் வழங்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
பிக் பாஸ்க்கு பின் பிரதீப்புக்கு கிடைத்த கௌரவம்.. வெளியான சுவாரஸ்ய தகவல்!!