மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக கட்சி தலைவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
வீடு திரும்பிய கேப்டன்:
நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் மூச்சுதிணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்தாண்டு லேசான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், குணமாகி வீடு திரும்பினார். இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் மூச்சு திணறல் காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர்.
இதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் “விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கட்சி சார்பில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விஜயகாந்தின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்று வீடு திரும்பினார். இந்த செய்தியை விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் தன் சமூக வலைதள பக்கத்தில், ‘விஜயகாந்த் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்’ என்று பதிவிட்டார். இந்த தகவல் அவரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!