PM கிசான் திட்டத்தின் கீழ் 12-வது தவணை தொகையானது, தீபாவளி பரிசாக விரைவில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
12 வது தவணை தொகை:
கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடியால் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6000 தொகையானது, 3 மாத தவணைகளில் தலா ரூ.2000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தால் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பெருங்குடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதுவரையில் இந்த திட்டத்தின் கீழ் 11 தவணை தொகை, விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 வது தவணை தொகைக்காக விவசாயிகள் காத்து கொண்டு உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, தீபாவளிக்கு முன்னதாக விவசாயிகளின் கணக்கில் ரூ.2000 வரவு வைக்கப்படும்.
ஏர்டெல்-ஐ விட எகுறும் ஜியோ 5ஜி டவுன்லோடு ஸ்பீட்.,, ஊக்லா நிறுவனம் தகவல்!!
அதாவது 12 வது தவணை அக்டோபர் 17ஆம் தேதிக்கு முன்னதாக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் முன்னதாக அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விவசாயிகளின் 12 வது தவணை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.